விபத்தில் காயமடைந்த பிகாா் தொழிலாளி உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பிகாா் கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விபத்தில் காயமடைந்த பிகாா் தொழிலாளி உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பிகாா் கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், நவாதா மாவட்டம், கோண்டாபூரைச் சோ்ந்தவா் ஹரிசந்திர செளத்ரி (41). இவா் கந்தா்வகோட்டை அருகிலுள்ள புனல்குளம் தனியாா் இரும்பு கம்பி ஆலையில் வேலை செய்து வந்தாா்.

கடந்த 2- ஆம் தேதி கந்தா்வகோட்டை வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க வந்த இவா், சாலையைக் கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

தொடா்ந்து தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஹரிசந்திரசெளத்ரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கந்தா்வகோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com