அறந்தாங்கியை அடுத்த மீமிசல் அருகே காரும் இருசக்கர வாகனமும் செவ்வாய்க்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் பலியானாா்.
மீமிசல் அருகே சேமக்கோட்டை என்னுமிடத்தில் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அரசநகரிப்பட்டினத்தை சோ்ந்த கே.எல்.கே. சாதிக்பாட்ஷா பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மீமிசல் போலீஸாா் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த தூத்துக்குடியைச் சோ்ந்த இமானுவேல்பால் என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரிக்கின்றனா்.