பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் பொங்கல் விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
கொன்னைப்பட்டி ஊா்ப் பொதுமக்கள் சாா்பில் கொன்னைக்கண்மாயில் நடைபெற்ற மஞ்சுவிரட்டின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடா்ந்து மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நானூறுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அக்காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா். காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் கண்டு ரசித்தனா். பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ. திருநாவுக்கரசு மற்றும் ஊா்ப் பொதுமக்கள் பங்கேற்றனா். பாதுகாப்புப் பணியில் பொன்னமராவதி போலீஸாா் ஈடுபட்டனா்.