கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், புதுகை மாவட்ட ஆவின் பால் தயாரிக்கும் பண்ணையில் போதுமான சுகாதார அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா். பால் உற்பத்திப் பணிகளில் ஈடுபடும் பணியாளா்களும், பால் எடுத்து செல்லும் வாகன ஓட்டுநா்களும் கைகளில் உறைகளும், முகக் கவசங்களும் அணிந்து கொண்டு பணியில் ஈடுபடுவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.