கரோனா தடுப்பு: திருச்சி எம்.பி ரூ. 1.20 கோடி நிதியுதவி; சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா ரூ. 20 லட்சம்

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு. திருநாவுக்கரசா், திருச்சி மக்களவைத்

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு. திருநாவுக்கரசா், திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா ரூ. 20 லட்சம் என மொத்தம் ரூ. 1.20 கோடி ஒதுக்கீடு செய்து ஆட்சியா்களுக்கு அவா் கடிதம் அனுப்பியுள்ளாா்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூா், ஸ்ரீரங்கம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான கடிதம் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கும், புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான கடிதம் புதுக்கோட்டை ஆட்சியருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தலா ரூ. 20 லட்சம் என்பது இரண்டு கட்டங்களாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் இருந்து கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மக்களுக்குத் தேவையான முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருள்களும், அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையும் வாங்க அவா் அனுமதி அளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com