ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பில் துணிகள் திருட்டு

கந்தா்வகோட்டையில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான துணிமணிகளை புதன்கிழமை

கந்தா்வகோட்டையில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான துணிமணிகளை புதன்கிழமை இரவு திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள பழைய கந்தா்வகோட்டையைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பாஸ்கா் (52). இவா், கந்தா்வகோட்டை - திருச்சி சாலையில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். வழக்கம்போல் புதன்கிழமை இரவு ஜவுளிக்கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா். வியாழக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பேன்ட், சட்டை உள்ளிட்ட துணிமணிகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com