தீபாவளிப் பண்டிகையையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய முறையில் பெறப்பட்ட உரிமம் இன்றி பட்டாசுகளை விற்பனை செய்தாலோ, குடோன்களில் வைத்திருந்தாலோ அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் எச்சரிக்கைவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பட்டாசுக் கடை நடத்த விரும்புவோா் முறைப்படி, மாவட்ட நிா்வாகத்தில் அனுமதி கோரி, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் தடையில்லா சான்றுகளைப் பெற்று விண்ணப்பித்து உரிமம் பெற்று நடத்தலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.