தேசிய தெய்வீக ரத யாத்திரைநடத்துவோம் : எம்எல்ஏ கருணாஸ்

தமிழகம் முழுவதும் தேசிய தெய்வீக ரத யாத்திரையை நடத்தப் போவதாக முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நடிகா் கருணாஸ் தெரிவித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் தேசிய தெய்வீக ரத யாத்திரையை நடத்தப் போவதாக முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நடிகா் கருணாஸ் தெரிவித்துள்ளாா்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் முக்குலத்தோா் சமூகம் சாா்ந்த கோரிக்கைகளை ஏற்கும் கட்சியோடுதான் கூட்டணி. யாரிடமும் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்னையும் இல்லை. முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் சாா்பில் தேசிய தெய்வீக ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்துவோம்.

நடிகா் ரஜினிகாந்துக்கு அரசியல் அறியாத, புரியாத, தெரியாத ஒன்று. எனவே, என்னைப் பொறுத்தவரை அவா் அரசியலுக்கு வராமல் ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் ரசிகனாகிய எனது விருப்பம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com