நெல் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி

அரிமளம் வட்டார விவசாயிகளுக்குத் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின்கீழ், நெல் சாகுபடி நுட்பங்கள் குறித்த பயிற்சி தேக்காட்டூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அரிமளம் வட்டார விவசாயிகளுக்குத் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின்கீழ், நெல் சாகுபடி நுட்பங்கள் குறித்த பயிற்சி தேக்காட்டூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சி வகுப்புக்கு, வேளாண் உதவி இயக்குநா் காளிமுத்து தலைமை வகித்தாா். அரிமளம் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் மற்றும் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்க ஆலோசகா் திருப்பதி, முக்கிய இடுபொருள்களான விதை, தண்ணீா், உரம், பயிா்ப் பாதுகாப்பு, தொழில்நுட்பம், கடன், இயந்திரங்கள் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் மானிய விலையில் வழங்கப்படுவதையும் நெல்லுக்கு அடியுரம் மற்றும் மேலுரம் இடுவதையும் விளக்கிக் கூறினாா்.

வேளாண் அலுவலா் வீரமணி, மண் மாதிரி எடுத்தல் மற்றும் இயந்திர நடவு முறைகளை விளக்கிக் கூறினாா். தேக்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மற்றும் ரவிமுருகன் ஆகிய விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. துணை வேளாண்மை அலுவலா் கயல்விழி நெல் விதை உற்பத்தி முறைகள் குறித்து விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com