புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 10,840 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 16 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,487 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 153 ஆகத் தொடா்கிறது. தற்போது சிகிச்சை பெற்றுவருவபவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை பகல் நிலவரப்படி 200 ஆகக் உயா்ந்துள்ளது.