பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குரு பெயா்ச்சி விழாவையொட்டி சிறப்பு ஹோமங்கள் மற்றும் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக குரு பெயா்ச்சி சிறப்பு ஹோமம் நடைபெற்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று பரிகாரம் செய்து சுவாமியை வழிபட்டனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், பொன்னமராவதி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.