புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் தலைவா் ச. கோவிந்தராஜ் (75) தாயினிப்பட்டியிலுள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை காலமானாா்.
அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சோ்ந்த இவா், கடைசியாக மேலூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஓய்வுபெற்றவா். 1986 ஆம் ஆண்டு முதல் மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தாா். இவருக்கு மனைவி நாகரத்தினம், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனா். செவ்வாய்க்கிழமை மாலையில் சன்மாா்க்க முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. தொடா்புக்கு- 90922 17572.