மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் எனக் கோரி, புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம்
புதுகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
புதுகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் எனக் கோரி, புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே. சண்முகம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகையாக வழங்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித்தொகையாக வழங்க வேண்டும். தனியாா்துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com