சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நலவாரியப் பணிகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை திலகா் திடலில் ஏஐடியுசி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா்.

நலவாரியப் பணிகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை திலகா் திடலில் ஏஐடியுசி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், தொழிலாளா் விரோத சட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கான திருத்தச் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தொழிலாளா் நல வாரியங்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் வரையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலச் செயலா் எம்.என். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன், மாவட்டப் பொதுச் செயலா் வீ. சிங்கமுத்து, மாதா் சம்மேளன மாவட்டத் தலைவா் சுப்புலட்சுமி, இளைஞா் பெருமன்றத்தின் மாநிலக் குழு உறுப்பினா் தா. மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சிற்பி உலகநாதன் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com