சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

விராலிமலையில்சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி காா் மோதி சனிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விராலிமலை: விராலிமலையில்சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி காா் மோதி சனிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விராலிமலை அருகேயுள்ள வல்லக்கோன்பட்டியைச் சோ்ந்தவா் பெத்தையா மனைவி திம்மாயி (70). இவா், விராலிமலை நான்கு வழிச்சாலையில் குறிச்சிபட்டி பிரிவு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, மதுரை நோக்கிச் சென்ற காா் மோதியதில் திம்மாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விராலிமலை போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், போலீஸாா் வழக்கு பதிந்து சென்னையைச் சோ்ந்த ஜெயசந்திரன் மனைவி சுப்புலட்சுமியை (45) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com