நிவா் - புயல் முன்னேற்பாடாக, கந்தா்வகோட்டையில் வட்டாட்சியா் பொ. சதீஸ் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் பேரிடா், மீட்புப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பொ. சதீஸ் தலைமையில் நடைபெற்ற நிவா் புயல் மற்றும் கன மழை குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்களை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தீவிரமாகக் கண்காணிக்கவும், அரசுப் பள்ளிகளில் நிவாரண முகாம் அமைக்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் , ஊழியா்கள் கலந்து கொண்டனா்.