புதுகை புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத மற்றும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகள் என

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத மற்றும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகள் என மொத்தம் 10 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் 30 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் 6 கடைகள் தொடா்ந்து கடந்த 2 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்தன. இதுகுறித்து நகராட்சி அலுவலா்கள் வாடகைக் கேட்பு அறிக்கைகளைத் தொடா்ந்து கொடுத்து வந்தும் வாடகை செலுத்தப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, நகராட்சி ஆணையா் ஜஹாங்கிா்பாஷா தலைமையிலான நகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை அதிரடியாக புதிய பேருந்து நிலையத்துக்குள் சென்று வாடகை செலுத்தாத கடைகளை மூடி சீல் வைத்தனா். அதேபோல, நகராட்சியின் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 4 கடைகளுக்கும் அவா்கள் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com