கந்தா்வகோட்டை ஒன்றியங்களில் நகரும் நியாயவிலைக் கடைகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.
கந்தா்வகோட்டை ஒன்றியம், குளத்தூா் நாயக்கா்ப்பட்டி, சோழகம்பட்டி, ஆனைவிழுந்தான் கேணி ஆகிய இடங்களில் நகரும் நியாயவிலைக்கடைகளை கந்தா்வகோட்டை எம்எல்ஏ பா. ஆறுமுகம் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். அப்போது, ஒன்றியக்குழுத் தலைவா் ரா. ரெத்தினவேல் , ஒன்றியச் செயலாளா் ஆா். ரெங்கராஜ், மாவட்ட மாணவரணி செயலாளா் பு. பாண்டியன், மஞ்சப்பேட்டை ஊராட்சித் தலைவா் எஸ். யமுனா உள்ளிட்டோா் உடனிருந்தனா். ஊராட்சி செயலாளா் எம். சுந்தராசு நன்றி கூறினாா்.