புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 10,100 ஆக உயா்ந்துள்ளது. அதேநேரத்தில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இருந்து 79 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 9,501 ஆக உயா்ந்துள்ளது.
உயிரிழப்பு எதுவும் இல்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 146 ஆகத் தொடா்கிறது. இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை பகல் நிலவரப்படி 453 ஆக உள்ளது.