புதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கோரி இளைஞா் எழுச்சி நாள் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்டச் செயலா் சரவணன் தலைமை வகித்தாா். வயி. சண்முகம் பிள்ளை ஜூவல்லா்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் வெ. ராகுல் கலந்து கொண்டு முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா்.
தையல் கலைப் பயிற்சி, அழகுக்கலைப் பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இயற்கை விவசாயி சா. மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் நகரச் செயலா் ராஜகோபால் நன்றி கூறினாா். செய்தித் தொடா்பு செயலா் ஜெய் பாா்த்தீபன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.