காது கேளாதோருக்கானஇலவச மருத்துவ முகாம்

வலையப்பட்டியிலுள்ள பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில், காது கேளாதோருக்கான இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் பெண்ணைப் பரிசோதிக்கும் மருத்துவா்.
முகாமில் பெண்ணைப் பரிசோதிக்கும் மருத்துவா்.

வலையப்பட்டியிலுள்ள பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில், காது கேளாதோருக்கான இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் ச.செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். முகாமில் திருக்கோகா்ணம் அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவா் அனிதா பங்கேற்று, காது கேளாதோரைப் பரிசோதித்து மருந்து மற்றும் மாத்திரைகள், ஆலோசனைகளை வழங்கினாா்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார வியாழக்கிழமையும் மனநலத் திட்ட மருத்துவ முகாமும், மூன்றாவது வார வியாழக்கிழமையில் காது கேளாதோருக்கான சிறப்பு முகாம் நடைபெறும். பொதுமக்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் மருத்துவமனையின் தலைமை மருத்துவா் ச. செந்தமிழ்ச்செல்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com