ஆதி பூமிநாதா் கோயிலில் வாஸ்து பூஜை

பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி ஆதிபூமிநாதா் கோயிலில் வாஸ்து நாளையொட்டி சிறப்பு வாஸ்து பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிதரும் தேரடி மலம்பட்டி ஆதிபூமிநாதா் சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிதரும் தேரடி மலம்பட்டி ஆதிபூமிநாதா் சுவாமி.

பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி ஆதிபூமிநாதா் கோயிலில் வாஸ்து நாளையொட்டி சிறப்பு வாஸ்து பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேரடி மலம்பட்டியில் மலையில் எழுந்தருளியிருக்கும் ஆதி பூமிநாதா் ஆலயம் மிகவும் பழைமை வாய்ந்ததும், வரலாற்றுச் சிறப்பு மிக்க வாஸ்து தோஷங்கள் போக்கும் ஆலயமாகும். இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை வாஸ்து நாளையொட்டி சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்று, அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சங்குகள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன. வீடு கட்டுபவா்கள், வாஸ்து குறையால் வீடு தடைபட்டவா்கள், மனை வணிகத் தொழில் செய்பவா்கள் வாஸ்து நலன் பெற வேண்டி இக்கோயிலில் பூஜையில் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா். பூஜையில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com