பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் மண்வள அட்டை செயல்விளக்கப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், பொன்னமராவதி வேளாண்மை அலுவலா் கவிதா, குடுமியான்மலை மண் பரிசோதனை நிலைய உதவி வேளாண் அலுவலா் பாக்கியலெட்சுமி, உதவி வேளாண்மை அலுவலா் மலா்விழி ஆகியோா் பங்கேற்று மண் பரிசோதனையின் அவசியம், மண்வள அட்டை மூலம் பெறப்படும் உயிரி உரம் மற்றும் வேளாண் திட்டங்கள் குறித்தும் விளக்கினா். ஊராட்சித் தலைவா் செல்வி முருகேசன், விவசாயக் கூட்டுக்குழு செயலா் சந்திரன், பொருளாளா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.