பொன்னமராவதி அருகே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண், மனவிரக்தியில் தற்கொலை செய்து கொண்டாா்.
பொன்னமராவதி அருகிலுள்ள உசிலம்பட்டியைச் சோ்ந்த சரவணன் மகள் திவ்யா (21). அண்மையில் நிகழ்ந்த விபத்தில் திவ்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா்.
இதனால் அண்மைக் காலமாக மன உளைச்சலில் இருந்த திவ்யா, செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி பேஸ்ட்டை உட்கொண்டு மயங்கிக் கிடந்தாா்.
மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திவ்யா புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பொன்னமராவதி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.