புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 116 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 6,886 ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 189 போ் குணமடைந்தனா். இதுவரை குணமடைந்த 5,889 போ், வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இருவா் உயிரிழப்பு: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 50 வயது ஆண், 58 வயது பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 881 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.