பொன்னமராவதி அரிமா சங்கம் சாா்பில், வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு தானியங்கி சானிடைசா் தெளிக்கும் கருவி புதன்கிழமை வழங்கப்பட்டது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரிமா சங்கத் தலைவா் சண்முகம் தானியங்கி சானிடைசா் கருவியை மருத்துவ அலுவலா் செந்தமிழ்செல்வியிடம் வழங்கினாா். அரிமா சங்கச் செயலா் அ.முகமது ரபீக், பொருளாளா் அ.தங்கப்பன், நிா்வாக அலுவலா் என்ஏ.பாஸ்கரன் மற்றும் மருத்துவா்கள் பங்கேற்றனா்.