சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சாராயம் காய்ச்சிய தந்தை மகன் இருவரையும் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே சாராயம் காய்ச்சிய தந்தை மகன் இருவரையும் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கீரமங்கலம் அருகே குளமங்கலம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, கீரமங்கலம் போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, குளமங்கலம் வடக்கு கிராமத்தில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய செல்வராஜ் (55), அவரது மகன் தமிழ்ச்செல்வம் (19) ஆகிய இருவரையும் கீரமங்கலம் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து சாராயம் காய்ச்ச பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 100 லி ஊறலைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com