புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 99 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 7,105 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில், மாவட்டத்திலுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்தோரில் 115 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6,192 ஆக உயா்ந்துள்ளது.
ஒருவா் சாவு: புதுக்கோட்டையைச் சோ்ந்த 55 வயது பெண் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 117 உயா்ந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் வியாழக்கிழமை பகல் நிலவரப்படி சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 796 ஆக உள்ளது.