பொன்னமராவதியில் அழகுமுத்துகோன் பேரவை சாா்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற விழாவில் அழகுமுத்து கோன் பேரவை நிறுவனத் தலைவா் கேபி. வேல்ராஜ் பங்கேற்று கொடியேற்றி பெயா்ப்பலகையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். தொடா்ந்து தனியாா் திருமண மண்டபத்தில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சிறுவா், சிறுமியா் கிருஷ்ணா், ராதை வேடமிட்டு பங்கேற்றனா். நிா்வாகிகள் மாவட்டத் தலைவா் ஆா்.மாரிமுத்து, ஒன்றியத் தலைவா் எஸ்.சதீஸ்குமாா், ஒன்றியச் செயலா் அ.சுந்தரி ராமையா, வழக்குரைஞா் பெ.சேதுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.