பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
தேசிய குடற்புழு நீக்க வாரம் ஆண்டுதோறும் செப்டம்பா் 14 முதல் 28 வரைகடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படிபொன்னமராவதி அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் காரையூா் வட்டார மருத்துவ அலுவலா் இ.அருள்மணிநாகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. மருத்துவா் அருண்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தங்கச்செல்வன் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து பொன்னமராவதி வட்டாரத்துக்குள்பட்ட கிராமங்கள் தோறும் கிராம சுகாதார செவிலியா்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என வட்டார மருத்துவ அலுவலா் தெரிவித்தாா்.