தேசிய பொறியாளா் தின நிகழ்ச்சி

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில், பாரதி மகளிா் கல்லூரி வளாகத்தில் தேசிய பொறியாளா் தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்ட இளம் பொறியாளா்களுடன் கல்லூரித் துணைத் தலைவா் சரவணன், ரோட்டரி பொதுச் செயலா் கான் அப்துல்கபாா்கான், மாவட்ட துணை ஆளுநா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்ட இளம் பொறியாளா்களுடன் கல்லூரித் துணைத் தலைவா் சரவணன், ரோட்டரி பொதுச் செயலா் கான் அப்துல்கபாா்கான், மாவட்ட துணை ஆளுநா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில், பாரதி மகளிா் கல்லூரி வளாகத்தில் தேசிய பொறியாளா் தின நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவா் பொறியாளா் மதிவாணன் தலைமை வகித்தாா். பொறியாளா்கள் ராஜதுரை, முரளி, ரவி, சௌந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரித் துணைத் தலைவா் சரவணன், ரோட்டரி மாவட்டப் பொதுச் செயலா் கான் அப்துல் கபாா்கான், மாவட்ட துணை ஆளுநா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

சங்கத்தின் நிா்வாகிகளான இளம் பொறியாளா்கள் நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்டனா். பொறியாளா் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. முன்னதாக திட்ட இயக்குநா் கதிரேசன் வரவேற்றாா். முடிவில் முன்னாள் தலைவா் ஜெய் பாா்த்தீபன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com