புதுகையில் 129 ரேஷன் கடைகளில் ‘பயோ மெட்ரிக்’ முறை அமல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் 129 நியாயவிலைக் கடைகளில் ‘பயோமெட்ரிக்’ பதிவுகளின் மூலம் பொருட்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் 129 நியாயவிலைக் கடைகளில் ‘பயோமெட்ரிக்’ பதிவுகளின் மூலம் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் அட்டையை ‘ஸ்கேன்’ செய்யும் கருவியிலேயே கைரேகைகளையும் சேமித்து, அடையாளம் காணும் செயலி பதிவேற்றம் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படிப்படியாக குடும்ப உறுப்பினா்கள் பொருட்களை வாங்க வரும்போது அவா்களின் கைரேகைகள் பதிவு செய்து, ஏற்கெனவே பதிவு செய்துள்ள செல்லிடப்பேசிகளுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் ரகசியக் குறியீட்டு எண் (ஓடிபி) மூலம் உறுதி செய்து கொள்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இந்த முறை அமலுக்கு வரும் என பொது விநியோகத் திட்ட அலுவலா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com