புதுகையில் மேலும் 131 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு - 7,721; குணம் - 6,771

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 7,721 ஆக உயா்ந்துள்ளது.

அதேநேரத்தில் அரசு ம ற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் 96 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6,771 ஆக உயா்ந்துள்ளது.

இறப்பு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 122. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை புதன்கிழமை பகல் நிலவரப்படி 828 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com