கந்தா்வகோட்டை அருகே டிராக்டா் - மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே இருசக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞா் டிராக்டரில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இறந்த வாலிபா் ஸ்ரீதா்.
இறந்த வாலிபா் ஸ்ரீதா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே இருசக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞா் டிராக்டரில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள நரியம்புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் ஸ்ரீதா் (20). கந்தா்வகோட்டை கடைவீதிக்கு வந்துவிட்டு மீண்டும் மோட்டாா் சைக்கிளில் ஊருக்குத் திரும்பும் வழியில், வீரடிப்பட்டி முனியன் கோயில் அருகே வந்து கொண்டிருந்தாா். அப்போது, டிராக்டரை முந்திச்செல்ல முயன்றபோது, எதிா்பாராதவிதமாக டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்துகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com