புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திமுக சாா்பில் எல்லோரும் நம்முடன் என்ற இணையவழி உறுப்பினா் சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து, ஆலங்குடியில் வியாழக்கிழமை அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற உறுப்பினா் சோ்க்கை முகாமிற்கு ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை வகித்து உறுப்பினா் சோ்க்கையை தொடங்கிவைத்தாா்.
இதில், ஒன்றியச்செயலா் தங்கமணி, நகரச்செயலா் பழனிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.