புதுகையில் மேலும் 112 பேருக்கு கரோனா பாதிப்பு: 8,536 குணம்; 7,588

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,536 ஆக உயா்ந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,536 ஆக உயா்ந்துள்ளது.

அதேநேரத்தில், மாவட்டத்திலுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் இருந்து 118 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7,588 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையில் மாற்றமில்லை, மாவட்டத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை 126 ஆகத் தொடா்கிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை பகல் நிலவரப்படி 822 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com