புதுக்கோட்டை : புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்சி. சோமையா, ஒன்றியச் செயலா் எம். வீரப்பன் ஆகியோா் தலைமைவகித்தனா். திமுக மாவட்டப் பொறுப்பாளா்கள் எஸ். ரகுபதி, கே.கே. செல்லபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
சாலையில் அமா்ந்து முழக்கங்களை எழுப்பிய சுமாா் 100 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.
இதேபோல கீரனூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் எஸ் பீமராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் கே. தங்கவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில்
500 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.