சிசிடிவி கேமரா, சேவை தொழிற்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

சி.சி.டிவி கேமரா பொருத்துதல் மற்றும் சேவை தொழிற்பயிற்சி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

சி.சி.டிவி கேமரா பொருத்துதல் மற்றும் சேவை தொழிற்பயிற்சி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநா் ஜெய அகல்யா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம், குறுகிய கால சி.சி.டிவி கேமரா பொருத்துதல் மற்றும் சேவை பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. 13 நாள்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படும் இப் பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அளிக்கப்படும்.

இப்பயிற்சி முடிவில் வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். பயிற்சியில் சேர 18 முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். கிராமப்புற இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் அக். 2 ஆம் தேதிக்குள் தங்களது பெயரை முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஷெரிப் காம்ப்ளக்ஸ் முதல் தளம், மதனகோபாலபுரம், சங்குப்பேட்டை, பெரம்பலூா்- 621212 என்ற முகவரியில் அல்லது 04328-277896 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என மைய இயக்குநரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com