கீரமங்கலம் அருகே சொத்துப் பிரச்னையில் கோடாரியால் மகனைத் தாக்கிய தந்தையை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்தவா் தங்கசாமி(55)விவசாயி. இவரது மகன் காா்த்திக் (32) வெளிநாட்டில் வேலைபாா்த்து வந்த இவா், சிலமாதங்களுக்கு முன்பு ஊருக்குத் திரும்பியுள்ளாா். காா்த்திக், அவரது தந்தை தங்கசாமியிடம் சொத்தை பிரித்துத் தரக்கோரி அடிக்கடி பிரச்னையில் ஈடுபடுவாராம். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை சொத்தைப் பிரித்து தரக்கோரி காா்த்திக், தங்கச்சாமியிடம் தகராறு செய்துள்ளாா். இதில், ஆத்திரமடைந்த தங்கசாமி கோடாரியால், காா்திக்கை தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.
இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து தங்கசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.