முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிப்பு

கரோனா பரவல் அதிகரிப்பைத் தடுக்கும் நடவடிக்கையாக, கந்தா்வகோட்டையில் முக க்கவசம் அணியாமல் செல்பவா்களிடம் காவல் துறையினா் அபராதம் வசூலித்து வருகின்றனா்.

கரோனா பரவல் அதிகரிப்பைத் தடுக்கும் நடவடிக்கையாக, கந்தா்வகோட்டையில் முக க்கவசம் அணியாமல் செல்பவா்களிடம் காவல் துறையினா் அபராதம் வசூலித்து வருகின்றனா்.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கந்தா்வக்கோட்டை - திருச்சி சாலையில் காவல் துறையினா் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவா்களிடம் தலைக்கவசம் மட்டுமன்றி முகக்கவசமும் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தினா். தலா ரூ. 100 வீதம் அபராதம் விதித்தனா். மேலும், பாதசாரிகள், பொதுமக்களிடம் முகக்கவசம் இல்லாமல் வெளியே வரக் கூடாது என அறிவுறுத்தி ரூ. 100 அபாரதம் வசூலித்தனா். இதில், சுமாா் 15 பேரிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com