சாலை விபத்தில் இளைஞா் பலி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே புதன்கிழமை மாலை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே புதன்கிழமை மாலை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

அறந்தாங்கி பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ராஜேஷ்(20). இவா், சொந்த வேலையாக கறம்பக்குடி அருகேயுள்ள காட்டாத்தி பகுதிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது, காட்டாத்தி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த ராஜேஷ் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து, கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com