வயது முதிா்ந்த அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் அடையாளம் தெரியாத மூதாட்டி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டையில் அடையாளம் தெரியாத மூதாட்டி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் அண்மையில் ( நவ. 22) சுமாா் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல்நலம் குன்றி முடங்கிக் கிடந்தாா். இதையடுத்து, உடல்நிலை மேலும் மோசமானதால், அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநா்கள் இதுகுறித்து அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்தனா். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கந்தா்வகோட்டை காவல் துறையினா் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com