புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை அறந்தாங்கி அருகே உள்ள வள்ளலாா் காப்பகத்திற்குச் சென்று, காப்பகத்துக்குத் தேவையான மேசைகள், நாற்காலிகள், அலமாரிகளை வழங்கினா்.
தொடா்ந்து, வள்ளலாா் காப்பகத்திலுள்ள மனநலன் குன்றிய மாணவா்களுடன் அவா்கள் உரையாடினா். அவா்களின் தனித்திறன்களைக் கேட்டறிந்தனா். ஏற்பாடுகளை மௌண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவா் ஜோனத்தன் ஜெயபாரதன், இணை ஒருங்கிணைப்பாளா் ஏஞ்சலின் ஜோனத்தன் ஆகியோா் செய்திருந்தனா்.