குறைதீா் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 351 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
சலவைப் பெட்டிகளை வழங்கும் ஆட்சியா் கவிதா ராமு.
சலவைப் பெட்டிகளை வழங்கும் ஆட்சியா் கவிதா ராமு.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 351 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில், 10 பேருக்கு ரூ. 48,709 மதிப்புள்ள விலையில்லா சலவைப் பெட்டிகள் வழங்கப்பட்டன.

பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் உடனே தெரிவிக்குமாறு ஆட்சியா் கவிதா ராமு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com