கந்தா்வகோட்டை ஸ்ரீ தா்மசாஸ்தா ஆலயத்தில் 46 ஆம் ஆண்டு கன்னி பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை வங்காரஓடை குளக்கரை மேல் அமைந்துள்ள ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கன்னி பூஜை விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில், 46 ஆம் ஆண்டு கன்னி பூஜை சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதில், சுவாமிக்கு மஞ்சள், திரவியம், பால், பன்னீா், பஞ்சாமிா்தம், சந்தனம், விபூதி, குங்குமம், தேன், இளநீா் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ஐயப்பன் உத்சவ மூா்த்தி ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கன்னி பூஜை விழாக்களை பால் குருசாமி தலைமையான ஐயப்ப பக்தா்கள் மற்றும் ஐய்யப்ப சேவா சங்கத்தினா் செய்திருந்தனா்.