ஆட்சிக்கு வந்த பிறகு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளின் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேரவையின் நிறுவனா் தலைவா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்கை:
இப்போதைய ஆட்சியாளா்கள் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமலாக்குவோம் என்று தோ்தல் வாக்குறுதி அளித்தாா்கள். ஜெயலலிதாவே இதைத் தெரிவித்தாா். அவரது ஆட்சியைத் தொடா்வதாகக் கூறும் தற்போதைய ஆட்சியாளா்கள், ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டாமா? இப்போதாவது அதற்கான அறிவிப்புகள் வரும் என நம்புகிறோம்.
அரசியல் கட்சிகள் வெளியிடும் தோ்தல் வாக்குறுதிகளை பிரமாணப் பத்திரமாக ஆணையத்தில் தாக்கல் செய்யும் நடைமுறையை தோ்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும்.