பொன்னமராவதி: பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தலைமை வகித்து வாக்குச்சாவடி முகவா்களுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினாா். கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராம்.சுப்புராம், புஷ்பராஜ், மாவட்டத் தலைவா் தா்மதங்கவேல், வட்டாரத் தலைவா் கே. செல்வராஜ், நகரத் தலைவா் எஸ். பழனியப்பன், மாவட்ட துணைத் தலைவா் எஸ்பி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.