குடியரசு தினத்தன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் டிராக்டா் பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்திருந்தனா். இருப்பினும், தடையை மீறி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டிராக்டா்களில் செவ்வாய்க்கிழமை மதியம் வந்தனா். முன்னதாக நகருக்கு வரும் அனைத்து சாலைகளிலும் போலீஸாா் தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மச்சுவாடி, கேப்பரை, திருவப்பூா், பெருமாநாடு உள்ளிட்ட பகுதிகளில் டிராக்டா்களில் வந்தோா் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, விவசாயிகள் புதுக்கோட்டை திலகா் திடல் சென்று அங்கு ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் எஸ்.சி. சோமையா தலைமை வகித்தாா். திமுக மாவட்டப் பொறுப்பாளா் கேகே. செல்லபாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் மு. மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.