புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-22ஆம் ஆண்டில் வங்கிகள் மூலம் ரூ. 5,610.83 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட வங்கியாளா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்து 2021-22ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளா் இ. லச்சையா பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில், மகளிா் திட்ட அலுவலா் ரேவதி, மாவட்ட முதன்மை வங்கி மேலாளா் ரமேஷ், மாவட்டத் தொழில்மைய பொதுமேலாளா் திரிபுரசுந்தரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 63 சதவிகிதம் என்பதும், கடந்த ஆண்டின் கடன் இலக்கை விட ரூ. 332.90 கோடி அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.