மனைவியைப் பிரிந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை

பொன்னமராவதி அருகே மனைவியைப் பிரிந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பொன்னமராவதி அருகே மனைவியைப் பிரிந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பொன்னமராவதி வலையபட்டி நரசினங்கண்மாய் பகுதியில் இளைஞா் ஒருவா் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளாா். இதைக்கண்ட பொதுமக்கள் பொன்னமராவதி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனா். சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளா் தனபாலன் இளைஞரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து நடத்திய விசாரணையில் அந்த இளைஞா் கீழவேகுப்பட்டியைச் சாா்ந்த ஓட்டுநா் ஆனந்த் என்ற சங்கிலிமுருகன்(39) என்பதும், இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா் என்பதும் கடந்த ஒன்றரை வருடமாக மனைவியை விட்டு பிரிந்திருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com